ஆதரவற்றோருடன் தீபாவளி' கொண்டாடும் ஈர நெஞ்சங்கள்!

கோவையை சேர்ந்த 'ஈர நெஞ்சம்' அறக்கட்டளை இந்த தீபாவளி பண்டிகையை ஆதரவற்றோருடன் கொண்டாட திட்டமிட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக கோவையின் முக்கிய தெருக்களில், சாலை ஓரங்களில் ஆதரவுன்றி வாழும் மனிதர்களுக்கு, முடித்திருத்தம் செய்து, புத்தாடை வழங்கிவருகின்றனர். 





இது குறித்து ஈர நெஞ்சம் அறக்கட்டளை நிறுவர் மகேந்திரன் கூறுகையில், 'தற்போது கோவை அரசு மருத்துவமனை பகுதியில் ஆதரவின்றி வாழ்பவர்களுக்கு புத்தாடை இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகிறோம். மகிழ்ச்சி் என்பது அனைவருக்கும் பொதுவானது, அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கம்', என்றார்.



பண்டிகை நாட்களின் பொது நம் குடும்பம் நம் உறவினர் நம் மகிழ்ச்சி என்று சுயநலமாய் வாழ பழகிவிட்ட இந்த காலகட்டத்திலும் மனித நேயத்துடன் சாலை ஓரங்களில் ஆதரவுன்றி வாழும் மனிதர்கள் நெஞ்சங்களில் மகிழ்ச்சி மத்தாப்பை ஏற்றும் ஈர நெஞ்சங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...