வாடிக்கையாளர் வருகையை எதிர்பார்க்கும் சிறுகுறு வியாபாரிகள்

இந்த ஆண்டு தீபாவளி வியாபாரம் படும் மந்தம் என சிறுகுறு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். காந்திபுரம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட சிறு கடைகள் உள்ளன. அவர்களில் வியாபாரம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் சிறுகுறு வியாபாரி மீனாட்சி சுந்தரம்:-

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கால வியாபாரம் படும் மந்தமாக உள்ளது. இந்த தீபாவளி பண்டிகை இம்மாதம் கடைசி நாட்களில் வருவதால் மாத கடைசியில் பொதுமக்களிடம் பணம் இல்லாமல் இருக்கிறது. இதனால் வியாபாரிகளுக்கும் தொழில் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.



இதனால் வியாபாரங்களில் வரவு குறைவாகவும், செலவு அதிகமாகவும் உள்ளது. அதே சமயம் தற்போது பொதுமக்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு வகையான ஆன்லைன் வர்த்தகங்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடைவீதிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்குகின்றனர். ஆன்லைன் வர்த்தகத்தில் பொதுமக்களை பல்வேறு இணைப்புகளில் இணைப்பதற்காகக் அனைத்து பொருட்களுக்கும் அதிக அளவில் தள்ளுபடி கொடுத்து வருகின்றனர். பல்வேறு  இதன் மூலம் சிறுகுறு வியாபாரிகளின் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.



மேலும் இப்பகுதிகளில் அதிநவீன வசதிகளுடன் உயரடுக்குமாடி கட்டிடங்களில் பல்வேறு கடைகள் வருவதால், இங்கு இருக்கும் 200க்கும் மேற்பட்ட கடைகளில் பொதுமக்கள் வருவதற்கும் யோசிக்கின்றனர். இந்த தீபாவளி பண்டிகை வியாபாரம் மிக மோசமாகவும், அதேசமயம் வாடிக்கையாளர்கள் எங்கள் கடைகளில் வருவதற்கு நாங்கள் எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறோம். இந்த மாத தீபாவளி வியாபாரம் வழக்கமான நாட்களைப் போலவே உள்ளது என்றார். 

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...