எல்லை தாண்டி மீன் பிடிக்கும் விவகாரம் : இந்தியா, இலங்கை நவ.5ம் தேதி பேச்சுவார்த்தை

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி  மீன்பிடிப்பதாக கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், கைது செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பிரச்னை தொடர்பாக, இரு தரப்பு மீனவ பிரதிநிதிகள் 3 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் ஏற்படவில்லை. இந்நிலையில், இரு தரப்பு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நவம்பர் 5ம் தேதி டெல்லியில் நடக்க உள்ளது.

இதில், இலங்கை தரப்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா, மீன்வளத்துறை அமைச்சர் மகிந்தா அமரவீரா தலைமையில் 10 பேர் கொண்ட மீனவ சங்கத்தினர் பங்கேற்க, வரும் 2ம் தேதி டெல்லி வர உள்ளதாக இலங்கையின் முன்னணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.அதில், மீனவர் பிரச்னை தொடர்பாக, அமைச்சர்கள் சமரவீரா, அமரவீரா ஆகியோர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச இருப்பதாகவும், இந்திய, இலங்கை மீனவர் சங்கத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...