வீட்டை காலி செய்யச் சொல்லி மிரட்டும் பூசாரி- ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், கனுவாய் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி ராஜராஜேஷ்வரி (38). அப்பகுதியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களது வீட்டின் அருகில் உள்ள கருப்பராயன் கோவில் பூசாரி தொடர்ந்து இவர்களது வீட்டினை காலி செய்யுமாறு மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர். இதுகுறித்து ராஜராஜேஷ்வரி கூறுகையில்,

''கனுவாய் பகுதியில் சொந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எனக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். எங்களது வீட்டின் கட்டிடத்தில் ஒரு பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளேன். எங்களது வீட்டில் இருந்து சுமார் 30 அடி தூரத்தில் கருப்பராயன் கோவில் உள்ளது. அங்கு பூசாரியாக மணி என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், எங்களது வீட்டினை காலி செய்துவிட்டு வீட்டினை கோவிலுக்கு தந்துவிடுமாறு அந்த கோவில் பூசாரியும், அவரது மனைவியும் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தநிலையில், தொடர்ந்து அவரும், அவரது மனைவியும் கடவுளின் பெயரைச் சொல்லி எங்களது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். வீட்டினை காலி செய்யாவிட்டால் பல அசம்பாவிதங்கள் ஏற்படும் என கூறுகின்றனர். 

இந்த விசயத்தில் உடனடியாக ஆட்சியர் தலையிட்டு கடவுளின் பெயரைக் கூறி மிரட்டி வரும் கருப்பராயன் கோவில் பூசாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்பத்தினருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு கருப்பராயன் கோவில் பூசாரி மணியே காரணம்'' என கூறினார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...