சவுதி அரேபியாவில் கால்பந்து மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல் முறியடிப்பு - ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது

உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 2018-ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து தற்போது அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சவுதி அரேபியா- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையேயான தகுதி போட்டி சவுதி அரேபியா தலைநகர் ஜெட்டாவில் உள்ள சர்வதேச கால்பந்து மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.

இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகள் என சந்தேகப்படும் 8 பேரை சவுதிஅரேபிய போலீசார் கைது செய்தனர். அவர்களில் 2 பேர் பாகிஸ்தானியர்கள். தலா ஒருவர் சூடானை சேர்ந்தவர்கள் மற்ற 4 பேர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இப்போட்டியின் போது கால்பந்து மைதானத்தில் கார்குண்டு தாக்குதல் நடத்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் வெடி குண்டு தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

இது தீவிரவாதிகளின் 2-வது தாக்குதல் சதியாகும். இதற்கு முன்பு சவுதி அரேபியாவில் குவாதிப் தமாம் ஆகிய 2 நகரங்களில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டனர். அச்சதி முறியடிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இங்கு தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...