வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள கோவை மாவட்டம் தயார்- ஆட்சியர்

வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கடந்த செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 7ம் தேதி கோவை மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு மற்றும மீட்புப் பணிகள் துறை, பொதுசுகாதாரத்துறை, கால்நடை உள்ளிட்ட பல துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டார்.

இதில், கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது 31 இடங்கள் பாதிப்புக்குள்ளாகக் கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களில் மண்டலக்குழு, முன்னெச்சறிக்கை குழு, தேடுதல் மற்றும் மீட்புக் குழு, வெளியேற்றும் குழு, நிவாரண முகாம் குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 1077 என்ற அழைபேசி வசதியுடன் அவசரப் பணி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவக்காற்று மழையினால் வெள்ள பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் பொதுமக்கள், கால்நடைகள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...