கோவை ரைபில் கிளப்பை மேம்படுத்தும் முயற்சி தீவிரம்- காவல் ஆணையர்

கோவை பிஆர்எஸ் காவல் பயிற்சி மைதானத்தில் கடந்த 1956ம் வருடம் முதல் ரைபில் கிளப் இயங்கி வருகிறது. அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், பிஆர்எஸ் ரைபில் கிளப்பை மேம்படுத்தப்பட உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது:- 

''இந்த ரைபில் கிளப்பில் 150-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 70 பேர் நிரந்திர உறுப்பினர்களாவர். நிரந்திர உறுப்பினர்களுக்கு வைப்புத் தொகையாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. அதுபோக மாணவ, மாணவிகளும் 125 பேர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால், இத்தகைய பெரிய தொகையினை அவர்கள் கட்ட முடியாது என்பதால் பள்ளி மாணவ, மாணவிகளிடம் குறைந்த கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. 

ரைபில் கிளப் 70 மீட்டர் நீலமும், 30 மீட்டர் அகலமும் கொண்டது. மொத்தம் 22 ஆயிரம் சதுர அடி அளவுக்கு ரைபில் எல்லை தற்போது உள்ளது. துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் போட்டிக்கு இது போதுமானதாக இல்லை. அதனால், பிஆர்எஸ் மைதானத்தில் உள்ள ரைபில் ரேஞ்சை பெரிதுபடுத்த அரசு நிதிக்கு விண்ணப்பித்துள்ளோம். இது கிடைத்தவுடன் விரைவில் பணி தொடங்கி விடும். மற்ற விளையாட்டுப் போட்டியைப் போல துப்பாக்கி சுடும் போட்டியினை தனியார் அமைப்புகள் நடத்த முடியாது. ரைபில் கிளப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மற்றும் ரைபில் கிளப் மூலமே இந்த போட்டியினை நடத்த முடியும். ரைபில் கிளப்பினை மேம்படுத்தும் பணி 2017 ஜனவரி அல்லது பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்'' என்று கூறினார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...