8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: RSS-க்கு தொடர்பு இருக்கலாம் என காங்., குற்றச்சாட்டு

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சிறையிலிருந்து தப்பிய 8 சிமி தீவிரவாதிகள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளார். போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாடு முழுவதும் கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் செல்வது தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். இது முக்கியமான பிரச்சனை என கூறியுள்ள அவர், ஆனால் சிமி தீவிரவாதிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் அல்லது அவற்றை சார்ந்த சில அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் சிமி தீவிரவாதிகள் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக கூறப்படுவதை மத்தியபிரதேச காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. என்கவுன்டர் வீடியோ காட்சியில் அசைவற்று கிடக்கும் தீவிரவாதிகள் மீது மீண்டும் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சியும் இடம் பெற்றிருந்தது. இதனால் சிமி தீவிரவாதிகள் கொல்லப்பட்டது போலியானது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் இதனை நிராகரித்துள்ள காவல்துறையினர் இது திட்மிட்டு நடத்தப்படவில்லை என்றனர். தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னரே பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக விளக்கமளித்துள்ளனர். என்கவுன்டரின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், அது தொடர்பான வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.    

சுட்டு கொல்லப்பட்ட தீவிரவாதிகள் சிறையில் இருந்து தப்ப உதவியர்கள் குறித்தும் தேசிய புலனாய்வு மூலம் விசாரணை நடத்தப்படும் என மத்தியபிரதேச அரசு அறிவித்துள்ளது. இதுபற்றி பேசிய அம்மாநில உள்துறை அமைச்சர் பூபேந்தர் சிங், இந்த தீவிரவாதிகள் ஏற்கனவே சிறையில் இருந்து தப்பிச் சென்று பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர் என்றார்.  முன்னதாக போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகள் 8 பேர் நேற்று அதிகாலை சிறைகாவலரை கொன்று விட்டு தப்பினர். பின்னர் தப்பிச் சென்ற அவர்களை புறநகர் பகுதியில் சுற்றிவளைத்த போலீஸார் அவர்களை சுட்டு கொன்றனர்

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...