கப்பல் உடைக்கும் தளத்தில் வெடிவிபத்து: பாகிஸ்தானில் 10 தொழிலாளர்கள் சாவு

பாகிஸ்தானில் கப்பல் உடைக்கும் தளத்தில் பழைய எண்ணெய்க் கப்பலை உடைக்கும் பணியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 10 தொழிலாளர்கள் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர். 30 தொழிலாளர்களின் நிலைமை குறித்துத் தகவல் இல்லை.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம், கடானி நகரிலுள்ள கப்பல் உடைக்கும் தளத்தில் எண்ணெய் ஏற்றிச் செல்லும் பயன்படுத்தப்படாத பழைய சரக்குக் கப்பலை உடைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தீச்சுவாலை மூலம் இரும்பை உருக்கி வெட்டும் "வெல்டிங்' முறையில் கப்பல் உடைப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அந்த எண்ணெய்க் கப்பலில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.

கப்பலின் பகுதிகள் தொடர்ந்து பல முறை வெடித்துச் சிதறியதில் அந்தக் கப்பல் முழுவதும் தீப்பிடித்தது.

இதில், 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.

விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து 25-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், கப்பலுக்குள் சிக்கியுள்ள சுமார் 30 தொழிலாளர்களின் நிலைமை குறித்து தகவல் இல்லை.

கொழுந்து விட்டு எரியும் எண்ணெய்க் கப்பலில் மேலும் வெடிவிபத்து ஏற்படலாம் என்பதால், மீட்புப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்த அனைவரும் கராச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அதிபர் மம்னூன் ஹுசைனும், பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...