லஞ்ச ஒழிப்பு வாரம் அவினாசிலிங்கம் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி


இந்திய அரசாங்கத்தின் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் சார்பில் கனரா வங்கி ஆண்டுதோறும் 31-5-2016 முதல் 5-11-2016 வரை லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக அனுசரித்து வருகிறது. இன்று கனரா வங்கி, அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2000 மேற்பட்ட மாணவ, மாணவிகளை கொண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



பேரணி நிறைவு பெற்றவுடன் அவினாசிலிங்கம் பல்கலைக்கழக கலையரங்கில் கோவை மாவட்ட உதவி காவல்துறை கண்காணிப்பாளர் முத்தரசு விழிப்புணர்வு பற்றி மாணவர்களிடையே உரையாற்றினார்.



பின்னர் பேசிய கனரா வங்கி துணை பொதுமேலாளர் பரமசிவம் விழிப்புணர்வு வாரம் பற்றிய அனுசரிப்பு பற்றி அவர் பேசுகையில்; இந்திய முழுவதும் இந்த வாரம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்பட்டடு வருகிறது. நாடு முழுவதும் உள்ள லஞ்ச ஒழிப்பு முற்றிலும் தடை செய்வதற்காக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கொண்டு செல்லப்படுகிறது. அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மாணவர்கள் மூலமாக இந்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது இதில் 2000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் வருங்காலத்தில் லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தவறு என்று உணர்த்தும் வகையில் மாணவர்களுக்காக இந்தப்பேரணி நடைபெற்றது. மேலும் மாணவர்களுக்கு லஞ்சம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 கல்லூரிகள் மற்றும் 17 பள்ளிகளில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பற்றி மாணவர்களுக்கு கூறப்படும் என கூறினார். 



இதில், அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் கிருஷ்ணகுமார், துணை வேந்தர் பிரேமவதி விஜயன், பல்கலைக்கழக பதிவாளர் வெண்மதி, கனரா வங்கி அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...