ஈராக்கில் தற்கொலை படை தாக்குதலில் 25 பேர் பலி

கிர்குக்: ஈராக்கில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் பலியானார்கள். மேலும், 50 பேர் காயமடைந்தனர். ஈராக்கின் மொசூல் நகரை மீட்பதற்காக அரசு படைகளுக்கும், அதை தக்க வைப்பதற்காக ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான சண்டை  நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஈராக் அரசு படைகள் தீவிரவாதிகளுடன் போரிட்டு வருகிறது. இந்நிலையில் ஈராக்கில் உள்ள திக்ரித் மற்றும் சமரா நகரங்களில் நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

திக்ரித் நகரின் நுழைவு வாயில் அருகே வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர். இதேபோல் சமரா நகரில் கார் பார்க்கிங்கில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...