கோவை அறம் அறக்கட்டளை மற்றும் நடராஜ் ஸ்ரீசரோஜினி அறக்கட்டளை சார்பில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டி புத்தகம்


கோவை அறம் அறக்கட்டளை மற்றும் நடராஜ் ஸ்ரீசரோஜினி அறக்கட்டளை இணைந்து அரசுப் பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டி மற்றும் வினா விடை வங்கி புத்தகம் இலவசமாக 1700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. 730 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் சிறப்பு ஆசிரியர் குழுவினைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், அனைத்துப் பாடப்பரிவுக்கான முழுமையான வழிகாட்டி மற்றும் 70 மாதிரி வினாக்கள் இடம் பெற்றுள்ளன. 



கிக்கானி மேல்நிலைப்பள்ளி, சரோஜினி நடராஜ் அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குற்றவியல் அரசு வழக்கறிஞர் கே.ஆறுமுகம், கிக்கானி கல்விக் குழும தாளாளர் துசார் ஆர்.கிக்கானி, வழக்கறிஞர் கூட்டுறவு சேவா சங்க தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், கூடுதல் அரசு வழக்கறிஞர் அகஸ்டஸ், நடராஜ் ஸ்ரீசரோஜினி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் எம்.என்.பத்மநாபன், கோவை அறம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரகுராமன், தன்னம்பிக்கை மற்றும் நினைவாற்றல் பயிற்சியாளர் ஆர்.விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...