டில்லி-மும்பை இடையே விரைவில் 160 கி.மீ., வேகத்தில் ரயில்

டில்லி - ஹவுரா, டில்லி - மும்பை இடையே மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் செல்லும் கதிமான் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

ரயில்வே திட்டம்:

டில்லி-ஹவுரா மற்றும் டில்லி-மும்பை வழியாக செல்லும் ரயில்களின் வேகத்தை கூட்டி, ரயில்களை மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் இயங்க வைக்கும் முயற்சியில் ரயில்வே இறங்கியுள்ளது. ரயில்களின் வேகத்தைக் கூட்டுவதன் மூலம், பயண நேரம் குறைந்து, கூடுதல் ரயில்களை இயக்க முடியும். பயணிகள் சிரமப்படாமல் பயணிக்க முடியும்.

10,000 கோடி:

இத்திட்டதிற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால் ஹவுரா - சென்னை, டில்லி - சென்னை, சென்னை - மும்பை ஆகிய வழித்தடத்திலும் இதனை நடைமுறைப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்தியா சில மாதங்கள் முன்பு மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் செல்லும் அதிவேக கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை வெற்றிகரமாக இயக்கியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...