என்டிடிவி ஒருநாள் தடை விவகாரம்: டிச.5 வரை காத்திருக்க உச்ச நீதிமன்றம் முடிவு

மத்திய அரசு விதித்த ஒருநாள் தடைக்கு எதிரான என்டிடிவி இந்தியா நிறுவன மனு மீதான விசாரணையை நடத்த டிசம்பர் 5-ம் தேதி வரை காத்திருக்க உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

அதாவது, மத்திய அரசே தடை குறித்து மறுபரிசீலனை செய்யவிருப்பதால் டிசம்பர் 5-ம் தேதி வரை காத்திருக்க உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

இது குறித்து ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு கூறும்போது, “தடை ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாங்கள் ஊடகங்களில் வாசித்தோம்” என்றார்.

தடை உத்தரவு இருக்கும் போதுதான் திங்களன்று என்.டி.டிவி நிறுவமனம் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. ஆனால் நேற்று மாலையே தடையை நிறுத்தி வைத்ததாக அரசு தரப்பிலிருந்து கூறப்பட்டது.

அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கி நீதிபதிகளிடம் கூறும்போது, என்.டி.டிவி பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட அமைச்சரைச் சந்தித்ததாக குறிப்பிட்டார்.

இதனையடுத்து டிசம்பர் 5-ம் தேதிக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு, அமைச்சர்கள் குழுவில் என்.டி.டிவி மீண்டும் ஒருமுறை தங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்கலாம் என்று நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில், அரசே தடையை நிறுத்தி வைத்துள்ளதால் டிசம்பர் 5-ம் தேதி வரை காத்திருக்க உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...