தேர்தலில் அபார வெற்றி: அமெரிக்க அதிபராக பதவியேற்கிறார் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து வரும் ஆண்டு 2017 ஜனவரி  20ம் தேதி  அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். குடியரசு அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வானார். 276 வாக்குகளபை் பெற்று டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபரானார். அவரை எதிர்த்து நின்ற ஹிலாரி கிளிண்டன் 218 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார். அரசியல் பின்புலம்  அல்லாத ஒருவர் அமெரிக்க அதிபாராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்க அதிபர்களில் மிகவும் வயதான  அதிபரும் டொனால்டு டிரம்ப்பே ஆவார். இதனையடுத்து, வரும் டிசம்பர் 19ம் தேதி  பிரதிநிதிகள் கூடி  முறைப்படி அதிபரை தேர்வு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் தேர்வுடன் துணை  அதிபர்  தேர்வும் நடைபெறுகிறது. துணை  அதிபருக்கு ஜனநாயக கட்சி சார்பில் டிம்கைனே,  குடியரசுக் கட்சி சார்பில் மைக்பென்ஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. தற்போதைய அமெரிக்க அதிபராக பராக்  ஒபாமா உள்ளார்.  அவரது பதவிக்காலம் 2017 ஜனவரி 20ம் தேதியுடன் முடிவடைகிறது.  எனவே, அமெரிக்காவின் 45வது புதிய அதிபரை தேர்வு செய்யும்  தேர்தல், அமெரிக்க நாட்டு  பாரம்பரியப்படி நவம்பர் மாதம் வரும் முதல்  திங்கட்கிழமைக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமையான  நேற்று நடைபெற்றது. முக்கிய கட்சிகளான ஜனநாயக கட்சி  சார்பில் ஹிலாரி  கிளின்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு   டிரம்பும் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர்.

நேற்று முன்தினம் பிரசாரம் முடிந்து திட்டமிட்டபடி நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 20 கோடி பேர் இந்த  தேர்தலில் ஓட்டு போட  முன்பதிவு செய்து இருந்தனர். அவர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று  தங்கள் ஓட்டுக்களை செலுத்தினர்.  இந்த ஓட்டுப்பதிவு முடிந்ததும் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் வாக்கு எண்ணப்பட்டது. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்  டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

ஹிலாரி கிளிண்டன் வாழ்த்து

அமெரிக்க அதிபராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து வரும் ஆண்டு 2017 ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...