செனட் சபை- பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு: அமெரிக்க தேர்தலில் 2 தமிழர்கள் வெற்றி

அமெரிக்காவில் செனட் சபை, பிரதிநிதிகள் சபை ஆகியவை உள்ளன. இதில், செனட் சபை உறுப்பினர்கள் நம்ம ஊர் மேல்-சபை எம்.பி. போலவும், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மக்களவை எம்.பி. போலவும் செயல்படுவார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தலுடன் ஒரு சில செனட்சபை, பிரதிநிதிகள் சபைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 பேர் போட்டியிட்டனர்.

செனட் சபைக்கு கமலா ஹாரிசும், பிரதிநிதிகள் சபைக்கு ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோகன்னா, அமிபேரா, பிரமிளா ஜெயபால் ஆகியோரும் போட்டியிட்டனர்.

இதில், செனட் சபைக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட வக்கீல் கமலா ஹாரிஸ் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ளார்.

இவர், சென்னையை சேர்ந்தவர். இவரது தாயார் டாக்டர் சியாமளா கோபாலன். புற்றுநோய் நிபுணர் ஆவார். 1960-ம் ஆண்டு வாக்கில் அமெரிக்கா சென்ற அவர், அங்கு ஜமைக்காவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ்.

அதேபோல் இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து ராஜா கிருஷ்ணமூர்த்தி பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டார்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி தமிழர் ஆவார். அவர், குடும்பத்தினர் முதலில் டெல்லியில் வசித்து வந்தனர். ராஜா கிருஷ்ண மூர்த்திக்கு 3 வயது இருக்கும் போது, அமெரிக்காவுக்கு சென்றனர். அங்கு சட்டப்படிப்பு, என்ஜினீயரிங் படிப்பு ஆகியவற்றை படித்துள்ள அவர், தொழில் அதிபராகவும் இருந்து வந்தார். அரசியலில் ஈடுபட்டு இப்போது பிரதிநிதிகள் சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...