ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்த இந்து மக்கள் கட்சி தலைவர் மீது வழக்கு

ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் மீது 2 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கருப்பு பணம் மற்றும் கள்ள பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தற்கு வரவேற்பு தெரிவித்து புதனன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் தலைமையிலான அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிலையில், அனுமதியின்றி பட்டாசு வெடித்து கொண்டாடிய அர்ஜுன் சம்பத் உட்பட 6 பேர் மீது, சட்ட விரோதமாக கூடுதல், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை அஜாக்கிரதையாக  கையாளுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
இதனிடையே, இந்த வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ள உள்ளதாக அர்ஜீன்சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...