தொலைத்தொடர்புத்துறை திறன் கவுன்சில் மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை: பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று தொலைத்தொடர்புத்துறை திறன் கவுன்சில் மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

தொலைத்தொடர்புத்துறையில் திறமையான ஆட்களை உருவாக்கவும், பயிற்சி அளிக்கும் விதமாகவும் கோவையில் இதற்கான ஒரு மையத்தை ஏற்படுத்த தொலைத்தொடர்புத்துறை திறன் கவுன்சில் மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் கோவையில் திறன் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக, துவங்கப்படவுள்ள இந்த மையத்தில், தொலைத்தொடர்புத்துறை அகண்ட அலைவரிசை (பிராட் பேண்ட்)தொழில்நுட்பம், ஆப்டிகல் பைபர் தொழில்நுட்பம் மற்றும் இணைப்பு முறைகள், வலைத்தொடர்பு மேலாண்மை, வாடிக்கையாளர் சேவை திறன் மேம்பாடு, பழுதுநீக்கல் உள்ளிட்ட அணைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். இந்த மையம் அரசின் நோக்கமான டிஜிட்டல் இண்டியா, மேக் இன் இண்டியா திட்டத்துக்கு உதவும் வகையில் பயிற்சி அளிக்கும். 



இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தொலைத்தொடர்புத்துறை திறன் கவுன்சில் தலைமை செயல் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) எஸ்.பி கோச்சர் மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் ருத்திரமூர்த்தி ஆகியோர் கையெழுத்திட்டனர்.



பின்னர், பேசிய தொலைத்தொடர்புத்துறை திறன் கவுன்சில் தலைமை செயல் அதிகாரி:- தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவது மட்டுமின்றி, தொழில்துறையை அடையவும் அனைவரின் நோக்கமான திறன்மிக்க இந்தியாவை உருவாக்குவதை லட்சியமாக கொண்டது. இவ்விரு நிறுவனங்களும், அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி வகுப்புகளை நடத்துவதோடு, மேம்படுத்தப்பட்ட தொலைத்தொடர்பு திறனை இளைஞர்களுக்கு அளித்து, அவர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி தரும். நாடு முழுவதும் தொலைத்தொடர்புத்துறை திறனை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். எவரெஸ்ட் சிகரத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திறன்மிக்க பணியாளர்களை உருவாக்க சிறப்பான பயிற்சியை இந்த மையம் அளிக்கும். அடுத்த இந்து ஆண்டுகளில் 8.67 மில்லியன் பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். கிராமப்புற இளைஞர்களுக்கும் இப்பயிற்சியை கொண்டு செல்ல ஆன் லைன் மற்றும் ஆப் லைன் முறையை கையாள உள்ளோம். அதிநவீன தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையிலும் தயார் நிலை பயிற்சியாக இம்மையம் இருக்கும் என அவர் கூறினார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...