அமெரிக்க குடியுரிமையை சீரமைக்க 10 அம்ச திட்டம் அறிமுகம்: டிரம்ப் முதல் அறிவிப்பால் இந்திய நிறுவனங்கள் அதிர்ச்சி

வாஷிங்டன்:அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்கிறார். அதற்கு முன் தனது நிர்வாக திட்டத்தை தயாரித்து வருகிறார். அமைச்சர்கள் நியமனம் தொடர்பாகவும் அவர் ஆலோசித்து வருகிறார். முதல்கட்டமாக தேர்தலில் அளித்த வாக்குறுதிபடி அமெரிக்க குடியுரிமை திட்டத்தை சீரமைப்பது தொடர்பாக டிரம்ப் அமைத்த நிர்வாக குழுவினர் 10 அம்ச திட்டங்களை அறிவித்துள்ளனர். அதன்படி சில நாடுகளுக்கு விசா உரிமையை ரத்து செய்வது, குடியுரிமை சட்டத்தை முறைப்படுத்துவது உள்ளிட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன என்று அந்த குழுவினர் அறிவித்து உள்ளனர். அணுஆயுதம், சைபர் தாக்குதல் மற்றும் நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் கூடுதல் அக்கறை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரசாரத்தின் போது  எச்-1 பி விசா திட்டம் மாற்றி அமைக்கப்படும் என டிரம்ப் கூறினார். அதன்படி இந்திய மதிப்பில்  மாதம் ரூ. 67 லட்சம் சம்பளம் வாங்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த விசா  வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இதுவும் 10 அம்ச திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டால் இந்திய நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று  அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...