சுண்டக்கமுத்தூர் குளத்தில் லாரியில் கடத்தப்படும் மண்ணை சிறைபிடித்த பொதுமக்கள்!

சுண்டக்கமுத்தூர் பகுதியில் உள்ள குளத்தின் மண்ணை கவுண்டனுர் பகுதிக்கு தடுப்பனைக்காக எனக் கூறி கடத்தப்படுவதை, அப்பகுதி மக்கள் இன்று லாரியுடன் சிறைபிடித்தனர்.



இது தொடர்பாக அப்பகுதி பாஜக உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறுகையில், பேரூர் வட்டம் சுண்டக்கமுத்தூர் பகுதியில் உள்ள குளத்தில் வடகிழக்கு பருவமழையின் மூலம் வெள்ள பாதிப்பை தடுக்கும் விதமாகவும், வெள்ளத்தினால் பாதிப்படையும் பகுதிகளை பாதுகாக்கவும், குளத்திற்கு மழைநீர் வரும் வாய்காலினையும் அமைத்தும் உடனடியாக தூர்வாரி சுத்தம் செய்து தருமாறும், மேலும்  இக்குளத்தை சுற்றியுள்ள பகுதியில் விவசாய நிலங்களும் உள்ளதால், குளத்தை தூர்வாருவதற்கு  கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக  இப்பகுதியில் பேரிடர் மீட்புக் குழு அமைக்கப்பட்டது. இது தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு தாசில்தாரை சந்தித்த போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக இக்குளம் சரிசெய்யப்படும் என அவர் கூறினார்.



இதனையடுத்து, அப்பகுதியில் குளம் தூர்வாரப்படாமல் இருந்துவந்தது, மேலும் கவுண்டனூர் பகுதியில் தடுப்பணை அமைப்பதற்காக இக்குளத்தில் இருந்து மண் எடுப்பதற்கு தாசில்தார் அனுமதியளித்தார். இதன் மூலம் தற்போது கடந்த நவம்பர்  5ம் தேதி முதல் இக்குளத்தில் உள்ள மண்ணினை ஒரு தனியார் லாரி சர்வீஸ் மண் எடுத்து வருகின்றனர். தினமும் 10 லாரிகளின் மூலம் மண் அள்ளப்படுவதை, கண்டு அப்பகுதிமக்கள் சந்தேகம் அடைந்தனர். பின்னர் கவுண்டனூர் பகுதிக்கு இக்குளத்தில் எடுக்கப்படும் மண் நிறுத்தப்பட்டுள்ளதை அறிந்த மக்கள் இது குறித்து தாசில்தாரிடம் கேட்டபோது, லாரி சர்வீஸ் ஒப்பந்தத்தை மீறி மண்ணை வெளியில் விற்று வருவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு மக்கள் இன்று மதியம் இப்பகுதியில் இருந்து கடத்தப்படும் மண் லாரியை சிறைபிடித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.



பின்னர், குறித்து தகவலை ஊர் பொதுமக்களின் கையெழுத்தின் மூலம் பேரூர் காவல்நிலையத்திலும், தாசில்தரிடமும் புகார் தெரிவித்தனர். தகவல் அறிந்த தாசில்தார் லாரியினை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...