கோவையில் வந்தடைந்த டெல்லி இந்திய விமானப் படை கண்காட்சி வாகனம்.

இந்திய விமானப் படை குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய விமானப் படை சார்பாக டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்திய விமானப் படை பற்றிய கண்காட்சி வாகனம் கோவைக்கு வந்தது. அதன் ஒருபகுதியாக இன்று ஜி.டி மெட்ரிக் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்திய விமானப்படை அதிகாரிகள் கலந்துரையாடினர்.
 



இது குறித்து, டெல்லி இந்திய விமானப் படை இணை இயக்குநர் பணியாளர்கள் அதிகாரி ஜோசப் கூறுகையில்:- 
இந்திய விமானப்படை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை சார்பில் ஒரு கண்காட்சி வாகனம் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம்.  இந்த வாகனம் ஜெய்ப்பூர், குஜராத், புனே, பெங்களூர் போன்ற இடங்களில் சென்றும்  தற்போது கோயமுத்தூர் வந்தடைந்துள்ளது.



ஒவ்வொரு மாநிலத்திலும் ஐந்து நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளோம். கோவையில் அமிர்த பல்கலைக்கழகம், ஹிந்துஸ்தான் கல்லூரி போன்ற கல்லூரி நிறுவனங்களில் மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த வாகனத்தில் விமானப்படை சம்மந்தமான வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களும், விமானப்படையினர் உபயோகப்படுத்தும் பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் விமானப்படையில் மாணவர்கள் சேர்வதற்கு இக்கண்காட்சி ஊக்கம் அளிக்கும் என அவர் கூறினார்.



Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...