6 நாள் சுற்றுப்பயணமாக மும்பை வந்தடைந்தார் இஸ்ரேல் ஜனாதிபதி ரிவ்லின்

இந்தியா-இஸ்ரேல் உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இஸ்ரேல் ஜனாதிபதி ரியூவென் ரிவிலின் 6 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று மும்பை வந்து சேர்ந்தார்.

இன்று காலை அரசு உயர் அதிகாரிகள், தொழில் அதிபர்கள், மற்றும் கல்வியாளர்களுடன் மும்பை விமானநிலையம் வந்து சேர்ந்த ரிவ்லின், டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். டெல்லி சென்றடைந்ததும். பிரதமர் மோடி வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ஆகியோரை சந்தித்து பேசும் ரிவ்லின், இரு நாட்டு கூட்டு திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வரும் திட்டங்களை பார்வையிட உள்ளார்.

சண்டிகாரில் நடைபெறும் அக்ரோ-டெக் மாநாட்டில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் இணைந்து ரிவ்லின் கலந்து கொள்கிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் நினைவிடத்துக்கு செல்கிறார். பின்னர் மகாத்மா காந்தியிடன் நினைவிடம் செல்லும் ரிவ்லின் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

ரிவ்லின் இந்தியா புறப்படுவதற்கு முன் வெளியிட்ட அறிக்கையில், “ இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் நட்பு நாடான இந்தியாவுக்கு பயணம் செய்ய உள்ளதாகவும், இருநாடுகளுக்கும் இடையே பழங்கால பாரம்பரியம் உள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான நட்பு மேலும் நெருக்கமாக வளரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...