அமிர்த் சிறப்பு மையத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

பேப்டிஸ்ட் அகாடமி பள்ளி மாணவர்கள், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அமிர்த் சிறப்பு மையத்தில் உள்ள குழந்தைகளோடு இணைந்து குழந்தைகள் தினவிழா கொண்டாடினர். 



பேப்டிஸ்ட் அகாடமி பள்ளியின் முதல்வர் டேனியல் கூறுகையில்:-
குழந்தைகள் தினவிழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. எங்கள் பள்ளி மாணவர்கள் இந்த வருடம் குழந்தைகள் தின விழாவினை அமிர்த் சிறப்பு மையத்தில் இவர்களுடன் கொண்டாடுகின்றனர். இவர்களை புரிந்து கொண்டு இவர்களுக்கு உதவி செய்வது மூலம் மாணவர்கள் பல்வேறு நல்ல செயல்களை கற்றுக்கொள்கின்றனர். இந்த குழந்தைகளுக்கு கற்பிக்கப்டும் பல்வேறு பயிற்சிகள் மூலம் இக்குழந்தைகள் சிறந்து விளங்குகின்றனர். இந்த குழந்தைகளின் திறமை மிக்க செயல்களை பார்த்து எங்கள் பள்ளி மாணவர்களும் பல்வேறு நற்செயல்களை இவர்கள் மூலம் கற்றுக்கொள்வது பயனளிக்கும் விதமாகவும் இருக்கும் என்றார்.



அமிர்த் சிறப்பு மையத்தின் முதல்வர் நளினி ஜெயபிரகாஷ் கூறுகையில்:-
அமிர்த் சிறப்பு மையம் மூளை வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியாக செயல்பட்டு வருகிறது. ஊனமுற்ற குழந்தைகளுக்கு உதவி செய்யும் விதமாக இம்மையம் தொடங்கப்பட்டது. இம்மையம் துவங்கப்பட்டு 53 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இம்மையத்தில், பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது உடையவர்கள் வரை உள்ளனர். 50 குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட இம்மையம் தற்போது 140 மாணவர்கள் கொண்டு செயல்படுகிறது. இம்மையத்திற்கு பல தன்னார்வ தொண்டு நிறுவனவர்கள் பல்வேறு உதவிகள் செய்து  வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களின் வயதுக்கும் கற்றல் திறனுக்கும் ஏற்ப பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இங்கு பயிலும் மாணவர்களுக்கு சுயசார்பு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி, ஆரம்ப கல்வி, பிசியோதெரபி, பேச்சு திறன் போன்றவற்றை வழங்கபடுகிறது.



Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...