கணைய அழற்சி சிகிச்சையில் ஜெம் மருத்துவமனை சாதனை

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீன் (22). பி.இ. கணினி அறிவியல் பட்டதாரியான இவருக்கு கணையத்தில் அழற்சி ஏற்பட்டு நாமக்கல்லில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் மிகவும் சிரமப்பட்டு வந்த அவர் சில நாட்களுக்கு முன்பு கோவையில் செயல்படும் ஜெம் மருத்துவமனையில் கணைய கல்லீரல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலைமை மருத்துவர் பழனிவேலு தலைமையில் மருத்துவர்கள் கான், ரமேஷ், திவாகர் ஆகியோர் சிகிச்சை மேற்கொண்டனர்.

மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்குப் பின் அறுவை சிகிச்சை எதுவுமின்றி மருந்துகள் மற்றும் மருத்துவர்களின் வழிகாட்டுதலின் படி தற்போது அவர் நல்ல முறையில் உடல் நலம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து, ஜெம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சி.பழனிவேலு கூறுகையில், ''பித்தப்பை கற்களின் தூண்டுதலால் தான் கணையம் அதிகமாக பாதிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது மது அருந்துதல், வைரஸ் கிருமிகள் காரணமாக கணையம் பாதிக்கப்பட்டு வருகிறது. உரிய தருணத்தில் சரியான சிகிச்சை அளித்தால் கணைய அழற்சியில் இருந்து முற்றிலும் குணப்படுத்தி விடலாம்'' என்றார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...