காபூலில் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் நடந்த தற்கொலைப்படையினர் நடத்திய மோட்டார் வாகன குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் புலி மெஹ்மூத் கான் பகுதியில் உள்ள ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகத்தின் வளாகத்தில் நடந்ததாக ஆப்கன் பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 4 பேர் பலியானதாகவும், 11 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் குண்டூஸ் மாகாணத்தில் செயல்பட்டுவந்த தலிபான் முகாம்கள் மீது அமெரிக்க விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியது. அதற்கு பழிவாங்கும் நோக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக குண்டூஸ் மாகாணத்தின் மஸார்-இ-ஷெரீஃப் நகரில் உள்ள ஜெர்மன் தூதரகம் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய சரக்கு வாகனத்தை மோதச் செய்து தலிபான் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...