500, 1000 ரூபாயை மாற்ற தபால் துறையின் சார்பில் பணபரிமாற்ற சேவை வாகனம் துவக்கம்

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் அறிவிப்பு வெளியிட்டார். அதைத்தொடர்ந்து, பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.



தபால் நிலையங்களைப் பொறுத்தவரையில், தலைமை தபால் நிலையம் மற்றும் துணை தபால் நிலையங்களில் மட்டுமே 500 மற்றும் 1000 ரூபாய் பணத்தை மாற்றிக்கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.



இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்தினை சந்தித்து வரும் நிலையில், அதனைப்போக்கும் வகையில் தபால் துறையின் சார்பில் நடமாடும் பணபரிமாற்றச் சேவை வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கோவை அரசினர் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் இந்த பணபரிமாற்ற சேவை வாகனத்தால் பலரும் பயனடைந்து வருகின்றனர்.

இதனால், பொதுமக்களின் நேரம் சேமிக்கப்படுவதாகவும், சிரமங்கள் குறைவதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சேவை மையத்தில் பணத்தை பெறவும், டெபாசிட்டும் செய்ய முடியும்.



பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளின் நகல்களைக் கொடுத்து நபர் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வரை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...