சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த பேருந்துக்கு முறையான ஆவணம் இல்லாததால் பேருந்து சிறைபிடிப்பு

கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் சுற்றுலா செல்வதற்காக கேரளா சொகுசு பேருந்தை ஏற்பாடு செய்த நிலையில் வரி செலுத்தாதல், உரிய ஆவணங்கள் இல்லை என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீரென அப்பேருந்தை சிறை பிடித்தனர். இதனால், சுற்றுலா செல்ல ஆவலுடன் பேருந்தில் இருந்த மாணவர்கள் இரவு முழுவதும் சாலையில் காத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சாலையில் உள்ளது கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு இன்ப சுற்றுலா பயணம் என சுமார் 80 பேரிடம் 20 ஆயிரம் ரூபாய் வீதம் வசூல் செய்துள்ளனர். 

சுற்றுலாவிற்காக கேரளாவுக்கு உட்பட்ட பாலக்காட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான பேருந்தை கல்லூரி நிர்வாகத்தினர் வாடகைக்கு எடுத்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து, புதனன்று இரவு 15 நாட்கள் சுற்றுலா என இரு கேரளா சொகுசு பேருந்துகள் கல்லூரிக்கு வந்ததையடுத்து  காத்திருந்த மாணவர்கள் அனைவரும் ஆவலுடன் ஏறியுள்ளனர். 

இந்நிலையில், சற்றும் எதிர்பாராத விதமாக வந்த வட்டாரப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பேருந்தின் ஆவணங்களை ஆய்வு செய்ததில் இதுவரை முறையான ஆவணங்கள், பர்மிட் பணம் எதுவும் செலுத்தவில்லை என்று பேருந்தை சிறைபிடித்ததையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

சுற்றுலா போகிறோம் என்ற கனவில் இருந்த மாணவ மாணவிகள் பேருந்து இல்லை என்ற ஏக்கத்தில் கவலை அடைந்து சோகத்துடனே காணப்பட்டனர். 

தமிழக- கேரளா எல்லையான எட்டிமடை உள்ளிட்ட பல பகுதியில் கேரளாவில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை கொட்டி வரும் நிலையில் தற்போது முறையான ஆவணங்கள் இன்றி சொகுசு பேருந்துகளையும் இயக்கி வருவது பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...