குறிச்சி அரவான் கோவில் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து பாதைகள் மாற்றம்

கோவை மாவட்டம், போத்தனூர் குறிச்சி பிரிவு அருகில் உள்ள அரவான் கோவிலில் வருகிற 18ம் தேதியன்று (வெள்ளி) திருவிழா நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 11 மணி முதல் பகல் 2 மணிவரை கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

1) கோவை உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி மார்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் ஆத்துபாலம் வழியாக போத்தனூர் குறிச்சி பிரிவில் இடதுபுறம் திரும்பி போத்தனூர் கடைவீதி வழியாக இரயில்வே கல்யாண மண்டபம், சாரதா மில் ரோடு, தக்காளி மார்கெட் வழியாக பொள்ளாச்சி சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

2) பொள்ளாச்சியிலிருந்து கோவை உக்கடம் நோக்கி வரக்கூடிய கனரக வாகனங்கள் அனைத்தும் ஈச்சனாரி மஹாலட்சுமி கோவில் சந்திப்பிலிருந்து இடதுபுறம் மதுக்கரை மார்க்கெட் ரோடு சென்று பிள்ளையார்புரம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சுகுணாபுரம் பாலக்காடு சாலை வழியாக ஆத்துபாலம் வந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

3) பொள்ளாச்சி ரோட்டிலிருந்து கோவை உக்கடம் நோக்கி வரக்கூடிய இலகு மற்றும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் பொள்ளாச்சி ரோடு எல்ஐசி காலனி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மதுக்கரை மார்க்கெட் ரோடு வந்து மாச்சாம்பாளையம் ரோட்டில் இடதுபுறம் திரும்பி ஞானபுரம் பாலக்காடு ரோடு சந்திப்பு வந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...