இந்திய தொழில் வர்த்தக சபை கோவை சார்பில் 'ஒன்றிணைவோம்' கருத்தரங்கு

கோவை: அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் கோவை இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் 'ஒன்றிணைவோம்' என்ற கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழகத்தில் உள்ள தொழில் வர்த்தக சங்கங்களின் அனைத்து தலைவர்களையும், பொறுப்பாளர்களையும் இணைக்கவும் நம் மாநிலத்திற்கு முன்னேற்றத்தையும் வளத்தையும் கொண்டுவருவதற்குமான ஒரு முன்முயற்சியே இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கம்.



இந்நிகழ்ச்சியில், சுமார் 18 தொழில் வர்த்தக சங்கங்கள் கலந்து கொண்டது. வணிக அமைப்புகள் நம் மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல என்னென்ன செய்யவேண்டும் என்பது தொடர்பான கருத்துக்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டது. மேலும் தமிழக பொருளாதாரத்தில் சில முக்கிய பிரச்சனைகளாக பல வகைகளில் பாதிப்பவை.




1. வரும் 1 ஏப்ரல் 2017ம் தேதி முதல் அமலாக்கவிருக்கும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை.
2. ரொக்க பணமில்லாத பொருளாதாரத்தை உருவாக்கும் பொருட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை.
3. தொழிலாளர் நிர்வாகம் போன்றவை, எப்படி தீர்ப்பது என முடிவு செய்வதே இதன் முக்கிய நோக்கம். 

'ஒன்றிணைவோம்' என்பது தமிழக முன்னேற்றத்திற்கு அவசியமான தளங்களில் தொழில் வர்த்தக அமைப்புகள் அரசாங்கத்துடன் இணைந்து  செயல்படுவதற்கான ஓர் அமைப்பு. இதில், உங்களது முயற்சியில் பங்கெடுத்து மதிப்பு மிகுந்த கருத்துக்களை முன்வைத்து பொது விவாதங்களை உருவாக்கி உரிய விளைவுகள் ஏற்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்பதற்கே கோவை, இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் இக்கருத்தரங்கு நடைபெற்றது. 

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...