கோவை இரயில் நிலையம் பகுதியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி மற்றும் தன்னார்வலர்கள்


தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சுத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளது. இதற்காக, கோவை மாநகராட்சியின் சார்பில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தூய்மைப் பணியில் ஈடுபட அழைப்பு விடப்பட்டது.



அதன்படி, இன்று கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட இரயில் நிலையம் அருகில் கோவை மாநகாட்சியும், தூய்மை பாரத இயக்கமும் இணைந்து காலை 7 மணி முதல் 9 மணி வரை தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.



ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா-வின் முன்பு 50-க்கும் மேற்பட்டோர் இணைந்து பேருந்து நிலையம், கடைகள், ஆட்டோ நிறுத்தம் ஆகிய பகுதிகளில் இருந்த குப்பைகளை அகற்றினர்.



இதையடுத்து, அப்பகுதியில் இருந்த சுவரொட்டிகள், விளம்பர பலகைகள் உள்ளிட்டவற்றை அகற்றி, அப்பகுதி கடைக்காரர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோரிடம் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



இப்பணிகளை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 



உடன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...