அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏடிஎம் இயந்திரத்தில் முழு ஊதியம் வரும்படி மாற்று ஏற்பாடு செய்ய மாவட்ட ஆட்சியரிடம் மனு

பண நோட்டுக்களை மாற்றும் விவகாரம் முடிவுக்கு வரும் வரை ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும், ஏடிஎம் இயந்திரத்தில் முழு ஊதியம் வரும்படி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கருப்புப் பணம் ஒழிப்பு நடவடிக்கையாக தற்போது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும், குறிப்பிட்ட காலத்தில் அதனை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், 2000 ரூபாய் நோட்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

ஆனால், நாளொன்றிற்கு 2000 ரூபாய் மட்டுமே ஏடிஎம்களில் எடுக்க முடியும் என்பதால் அரசு ஊழியர்கள் தங்களது பணிகளை விட்டுவிட்டு, விடுப்பு எடுத்து பணத்திற்காக ஏடிஎம் மையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த பிரச்சனைகளால் ஒட்டுமொத்தமாக அரசு இயந்திரமே ஸ்தம்பிக்கும் நிலை உள்ளதால் சிறப்பு சலுகையாக இம்மாத ஊதியத்தை மாவட்ட கருவூலங்களில் அரசு ஊழியர்கள் ரொக்கமாக பெற்றுக்கொள்ளவும், ஏடிஎம் இயந்திரத்தில் முழு ஊதியம் வரும்படி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும், வங்கி ஊழியர்கள் தங்களது பணத்தை தாங்கள் பணியாற்றும் வங்கிகளிலேயே மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அவர் கூறினார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...