கோவையில் வங்கி ஊழியருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே மோதல்


டவுன்ஹால் பகுதியில் உள்ள பெரியகடை வீதி கிளை  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாடிக்கையாளருக்கும், வங்கி ஊழியருக்கும்  இடையே தகராறு ஏற்பட்டது. பிரதமர் மோடி 500,1000 ரூபாய் நோட்டு செல்லாது என கடந்த மாதம் அறிவித்த நிலையில், வங்கியில் இன்றுவரை பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். 

இதன் விளைவாக, டவுன்ஹால் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கில் சேமிப்பு வைத்திருப்பவர்களுக்கு  ரூபாய் 2000 மட்டுமே இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு டோக்கன் வழங்கப்பட்டு காலை முதல் மாலை வரை பொதுமக்கள்  வங்கியில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர். 



இந்நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் இதனை வங்கி ஊழியரிடம் கேட்கையில், அவர் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனிடையே இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர், வங்கி ஊழியர் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்  என்று அவர் கூறினார். மேலும், வங்கியில் காத்திருக்கும் நிலைமாற இரண்டு கவுண்டர் திறக்கவும், ரூபாய் 2000க்கும்மேல் பணம் வழங்கப்பட வேண்டும் என வாடிக்கையாளர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...