3 நாட்கள் விடுமுறைக்கு பின்பு பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதியன்று இரவு உடல்நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

ஜெயலலிதா மறைவையொட்டி டிசம்பர் 6-ஆம் தேதி ஒரு நாள் பொதுவிடுமுறை விடப்பட்டது. 7 நாட்கள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், ஜெயலலிதா மறைவையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி முதல் டிசம்பர் 8-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 



இதனையடுத்து, மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மாணவ, மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச பொருட்களில் அனைத்திலுமே ஜெயலலிதாவின் உருவப்படம் உள்ளது. நோட்டு புத்தகங்கள், பள்ளி பை, லேப்டாப், சைக்கிள் என எண்ணற்ற பொருட்களை மாணவர்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் மனதைக் கவர்ந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து விட்டார் என்று அஞ்சலி நிகழ்ச்சியில் பல மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...