ஆதரவற்றோர் பசியை தீர்க்கும் கோவை உணவு வங்கியின் வெற்றிகரமான 100-வது நாளில் 10 ஆயிரம் பேருக்கு உணவு பரிமாற்றம்


கோவை மாவட்டத்தில் பல ஆதரவற்றோர் இல்லங்களிலும், சாலையோரங்களிலும் ஏராளமான மக்கள் அன்றாடம் உணவின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் கோவை உணவு வங்கி (Food Bank Coimbatore) என்னும் தன்னார்வ அமைப்பினர் உணவு தயாரித்து பரிமாறிவருகின்றனர்.



இவ்வமைப்பு துவங்கப்பட்டு தற்போது 100-வது நாளாக ஆதரவற்றோர்களுக்கு உணவு பரிமாறுவதை முன்னிட்டு கோவை உணவு வங்கியின் சார்பில் இன்று கோவை வஊசி மைதானத்தில் உணவு தயாரிக்கும் பணி நடைபெற்றது.

இதுகுறித்து கோவை உணவு வங்கியின் நிறுவனர் வைஸ்னவி நமது நிருபரிடம் கூறியதாவது:-



இவ்வமைப்பு துவங்கப்பட்டு வெற்றிகரமாக இன்றுடன் 100-வது நாளை அடைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நேற்று (சனி) மதியம் 3 மணியவில் இருந்து காய்கறிகளை வெட்டது துவங்கினோம். இன்று காலை 4 மணியவில் உணவு தயாரிக்கும் பணி நடைபெற்றது. நாங்கள் காய் பிரியாணி, தயிர்-வெங்காயம் மற்றும் இனிப்பு தயாரித்துள்ளோம். எங்களுடன் இணைந்து பலரும் இதில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.



இன்று சுமார் 10 ஆயிரம் பேருக்கான உணவு தயாரிக்கப்பட்டுள்ளது. இது கோவையில் 65 பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கும், சாலையோர மக்களுக்கும் பரிமாறப்பட உள்ளது. எஸ்என்எஸ் ராஜலட்சுமி கல்லூரியில் இருந்து சபிதா மற்றும் அருண் ஆகிய ஆசிரியர்களும் மாணவர்களும் தற்போது எங்களுடன் இணைந்து இந்தச் சேவையில் ஈடுபட்டுள்ளனர்'' என்றார்.



இதுகுறித்து எஸ்என்எஸ் ராஜலட்சுமி கல்லூரி ஆசிரியயை சபிதா நம்மிடம் கூறுகையில், 

கோவை உணவு வங்கியின் இந்த சேவை பாராட்டுக்குறியது. தற்போது நாங்களும் இதில் இணைந்து பணியாற்றியுள்ளோம். எங்களுடன் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களும் இதில் இணைந்துள்ளனர். மாணவர்கள் சமைக்க உதவியும், அதனை பரிமாறுவதற்கும் முன்வந்துள்ளனர். 



ஆதரவற்றோர்களுக்கு என பல தன்னார்வ அமைப்பினர் செயல்பட்டு வந்தாலும் கோவை உணவு வங்கி அமைப்பினர் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இப்பணியில் ஈடுபட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களது கல்லூரியில் உள்ள மற்ற ஆசியிர்களிடம் இதுகுறித்து கூறி இவ்வமைப்பில் இணைந்து பணியாற்ற செய்வோம்'' என்றார்.

Newsletter

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் பேரூர் தாலுகாவில் தொடக்கம்

கோவை பேரூர் தாலுகா தென்கரை பஞ்சாயத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் 600க...

கோவை செம்மொழிப் பூங்காவில் மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல செம்மொழிப் பூங்காவில் மேயர் K. ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ரோஜாத் தோட்டம்,...