பொதுமக்களை தற்கொலைக்கு தூண்டும் மைக்ரோ பைனான்ஸ் அமைப்பு மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் சி பி ஐ எம் மனு


பொதுமக்களை தற்கொலைக்கு தூண்டும் மைக்ரோ பைனான்ஸ் அமைப்பின் மீது நடவடிக்கை கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழு சார்பில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து, அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதியில் வசித்து வரும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தங்களது குடும்பத் தேவைக்காக மைக்ரோ பைனான்ஸ் அமைப்புகள் மூலம் மாதாந்திர தவணைக் கடன் பெற்றுள்ளனர்.

குறைந்தபட்சம் 9 பேரிலிருந்து 45 பேர் வரை உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு தனிநபர் ஜாமீன் பெற்று 24 தவணையில் கடன் வாங்கியுள்ளனர். இதில் கடந்த நவம்பர் மாதம் வரை முறையாக தவணைத் தொகை செலுத்திவந்த நிலையில் மத்திய அரசின் 500, 1000 ரூபாய் நோட்டு தடையால் சிறுசிறு வியாபாரம் மூலம் வருமானம் ஈட்டிவந்த சாமான்ய மக்களின் வருமானம் முடங்கிபோயுள்ளது.

இந்நிலையில், மைக்ரோ பைனான்ஸ் மூலம் பெறப்பட்ட மாதாந்திர தவணைத் தொகையை செலுத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொள்ளாத மைக்ரோ பைனான்ஸ் பொறுப்பாளர்கள் பெண்களை மிகக் கேவலமாக திட்டி அவமானப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக "பெண்கள் தற்கொலை செய்து கொண்டால் அவர்கள் பெயரில் காப்பீடு செய்யப்பட்ட நிறுவனங்களிலிருந்து பணம் திரும்ப கிடைத்துவிடும். எனவே, தற்கொலை செய்து கொள்ளுங்கள்" என மிரட்டி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

SUV Plunges into Pond Near Karumathampatti; Two Killed

Two persons from Tiruppur district died after the Bolero vehicle they were travelling in lost control and overturned int...

கோவை ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனையை ஆய்வு செய்த ஆட்சியர்

கோவையில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த நியாய விலைக்கடைகளில் கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட...

Road Accidents in Coimbatore: Elderly Man Killed; Four Seriously Injured

Four separate road accidents reported in Thudiyalur, Kavanuai, Vadavalli and Ramanathapuram areas of Coimbatore have lef...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...

கோவையில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: முதியவர் பலி; 4 பேர் படுகாயம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துகளில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந...

கோவையில் கஞ்சா, குட்கா விற்பனைக்கு எதிராக போலீஸ் அதிரடி: 7 பேர் கைது; 25 கிலோ பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோ...