"வைத்யா" என்னும் மருத்துவ மென்பொருள் உருவாக்கி பிஎஸ்ஜி மாணவர்கள் சாதனை


கோவை, பி.எஸ்.ஜி மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் "வைத்யா" என அழைக்கப்படும் மென்பொருளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். வைத்யா என்ற இந்த மென்பொருள் ஆதார் கார்டுகளுடன் மருத்துவத் தகவல்களை இணைத்து எளிய மற்றும் பயன்படுத்துவதற்கு வசதியாக அடக்கமான மற்றும் நாடெங்கிலும் அணுகத்தக்க ஓர் அமைப்பு ஆகும்.



இது மருத்துவமனையை மட்டுமல்லாது பரிசோதனை கூடங்களையும், மருந்தகங்களையும் இணைக்கிறது. ஆதார் எண் இல்லாதவரும் இவ்வமைப்பை பயன்படுத்தி அதன் பயன்களை அடையலாம். எனவே, இதன் மூலம் நோயாளிகளையும் மருத்துவத்திற்காக பின்தொடர வழிவகுக்கிறது.

நாட்டின் முக்கிய மருத்துவ நிலையங்கள் கணினிமையம் ஆக்கப்பட்ட தகவல் நிர்வாகங்களை பயன்படுத்தி வருகிறது. எனினும் அந்த தகவல் நோயாளிகள் மற்றும் அந்த மருத்துவமனையையும் சார்ந்து இருக்கும். தற்போதுள்ள இந்த வசதி நோயாளிகளின் மருத்துவத் தகவல்களை பரிமாற்றம் செய்ய போதிய வசதிகள் இல்லை. எனவே, நோயாளி பற்றிய அனைத்து தகவல்களையும் எந்த இடத்திலிருந்தும் அணுகத்தக்கவாறு ஒரு அமைப்பு முறை தேவைப்படுகிறது.



இதற்கு ஆதார் எண்ணானது இவ்வமைப்பு முறையை நிர்வகிப்பதில் முக்கிய தீர்வாக உள்ளது. ஒவ்வொரு இந்தியரையும் தனியாக அடையாளம் காட்டுவதற்கு வழிவகுக்கிறது. நோயாளிகளின் மருத்துவப் பதிவுகளை ஆதாருடன் இணைப்பதால் அது நோயாளிகளின் பிரத்யேக மருத்துவத்திற்கு வழிவகுக்கிறது. 

இவை தவிர மத்திய அரசும் கணினி மயமாக்கப்பட்ட மருத்துவப்பதிவுகளை உருவாக்கி அதன் தரத்தினையும் வரையறைகளையும் நோயாளிகளின் ரகசியங்களை பாதுகாக்கும் விதிமுறைகளையும் உருவாக்கியுள்ளது. 

இந்த முறையினை பிஎஸ்ஜி மருத்துவ மற்றும் தொழிநுட்ப மாணவர்களான ரோஹந்தி ரவிகுலன், தயானந், காசிநாதன், பிரகாஷ், பிரகதீஸ் ஆகியோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...