மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் அம்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளி, கே.கே.புதூர் அரசு பள்ளி, சித்தாபுதூர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி மற்றும் ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மருத்துவ முகாம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று நடைபெற்றது.



கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளர்களின் நலனை காக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இம்மாநகராட்சியில் பணிபுரியும் 2,740 நிரந்த துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்த ஆணையாளர் தலைமையில் சிஐஐ, ஐடிசி மற்றும் துப்புரவு பணியாளர்களின் சங்கங்கள் ஆகியோருடன் நவம்பர் மாதம் ஆலோசனை நடத்தி துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் மண்டல வாரியாக சனிக்கிழமைகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் ஏறத்தாழ 1000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கடந்த 2 வாரமாக ஒவ்வொரு வார்டிலும் நேரில் சென்று துப்புரவு பணியாளர்கள் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அதன் அறிக்கை இன்று வழங்கப்பட்டது.

மேலும், இந்த மருத்துவ முகாமில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை, கே.ஜி மருத்துவமனை, பி.எஸ்.ஜி. மருத்துவமனை, இராமகிருஷ்ணா மருத்துவமனை, குப்புசாமிநாயுடு மருத்துவமனை, ஜெம் மருத்துவமனை, கங்கா மருத்துவமனை, சங்கரா மருத்துவமனை மற்றும் தைரோகேர் ஆகிய முன்னனி மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பான சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நகரின் துய்மையை பாதுக்காக்கும் துப்புரவு பணியாளர்கள் தங்கள் உடல்நிலையை பேணிக்காக்க சிறப்பு மருத்துவங்களான தோல் சிகிச்சை, கண் சிகிச்சை, நுரையீரல் பாதுகாப்பு சிகிச்சை, இதயம் சார்ந்த சிகிச்சைகள், பொது மருத்துவம் மற்றும் பெண் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு தனி சிகிச்சை பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  



மேலும், இதில் ஒவ்வொரு துப்புரவு பணியாளர்களுக்கும் தனித் தனியாக சிகிச்சையளிக்கப்பட்ட விவரம் சார்ந்த கோப்புகள் வழங்கப்பட்டது. நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால் இந்த கோப்பை கொண்டு முன்னுரிமை வழங்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும். இந்த முகாமில் பரிசோதனை மேற்கொண்டு பணியாளர்களுக்கு தேவையான மருந்துகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். இம்முகாமில் கலந்து கொண்ட மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளுக்கும் ஆணையாளர் அவர்கள் நன்றி தெரிவித்தார். 



மேலும், மாநகராட்சியில் தூய்மைப்பணியை மேற்கொள்ளும் துப்புரவு பணியாளர்கள் தங்கள் உடல்நிலையை பேணிகாக்கவும் இந்த மருத்துவ முகாமை முறையாக பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளவும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். மீதமுள்ள கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு வரும் சனிக்கிழமைகளில் மருத்துவ முகாம் நடைபெறும் என ஆணையாளர் தெரிவித்தார்.                                                        
 
இம்மருத்துவ முகாமில் மாநகர நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மத்திய மண்டல உதவி ஆணையாளர் (பொ)மோகனசுந்தரி, மேற்கு மண்டல உதவி ஆணையாளர் ராமைய்யா, மத்திய மற்றும் மேற்கு மண்டல சுகாதார அலுவலர்கள், ரமணி, சங்கரா மருத்துவமனை, பிரவீன் ஜெம் மருத்துவமனை, சிஐஐ குழும உறுப்பினர்கள், ஐடிசி தன்னார்வ நிறுவன ஊழியர்கள் மற்றும் துப்புரவு சங்க உறுப்பினாகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...