மதுக்கரை வனப்பகுதியில் ஆந்த்ராக்ஸ் நோயால் ஆண் யானை பலி

கோவை மாவட்டம், மதுக்கரை வனப்பகுதியில் ஆண் யானை இறந்துகிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் உயிரிழந்த காட்டு யானையை சோதனையிட்டனர்.

தொடர்ந்து, அதனை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய கால்நடை மருத்துவர் மனோகரன் கூறுகையில், தற்போது மதுக்கரை வனப்பகுதியில் உரியிழந்திருப்பது ஆண் காட்டு யானை, சுமார் 20 வயதிருக்கும். இந்த யானைக்கு ஆந்த்ராக்ஸ் எனப்படும் கிருமித் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. யானைக் கூட்டத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயம் ஏற்பட்டு கிருமிதொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது" என்றார். 

மேலும், இப்பகுதியில் வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளிடையே கிருமி தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், கால்நடை விலங்குகளுக்கு தடுப்பூசி, சுற்றுப்புரத்தில் சுகாதாரத்தைபேனுதல் உள்ளிட்டவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...