மனநலம் பாதிகப்பட்ட பெண்ணின் கை, கால்களை கட்டி வைத்த தாய்- காப்பகம் வேண்டி கண்ணீர்


கோவை மாவட்டம், ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பியூலா (26). திருமணமான இவரின் குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது கணவர் பியூலாவை விட்டுச் சென்றுள்ளார்.



இதனால் மனவேதனையில் காணப்பட்ட பியூலா  கடந்த இரு மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு அவரது தாய் தனலட்சுமியின் அரவணைப்பில் இருந்துள்ளார். இதனிடையே, அப்பகுதியினரை கற்களைக் கொண்டு அடிப்பதும், சாலையில் திரிவதுமாக இருந்த அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஒரு குழந்தையின் தலையில் கற்களைக் கொண்டு தாக்கியுள்ளார்.



இதைத்தொடர்ந்து, அவரது தாய் பியூலாவை வீட்டினுள் சிறைவத்துள்ளார். தற்போது அப்பெண்ணை வீட்டின் அருகே உள்ள கோவிலில் கை, கால்களை கட்டி அமரவைத்துள்ளார்.

இதுகுறித்து, தனலட்சுமி கூறுகையில், என் மகளுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற போது மருத்துவர்கள் மாத்திரை, மருந்துகளை மட்டும் கொடுத்துவிட்டு அனுப்பி வைத்தனர். நான் அங்கேயே உள்நோயாளியாக அனுமதிக்கக் கோரிய போது அவர்கள் மறுத்து விட்டனர். நான் காலில் விழுந்தும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

தனியார் மருத்துவமனையில் அனுமதித்தால் நாள் ஒன்றுக்கு 1500 ரூபாய் கேட்கின்றனர். அந்தளவிற்கு பணம் எங்களிடம் இல்லை. அரசு நிர்வாகம் எங்களுக்கு உதவி செய்து என் மகளை குணமடையச் செய்ய வேண்டும்" என்றார்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினபுரி காவல் துறையினர் வியூலாவின் கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை அகற்றினர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...