புத்தாண்டு கொண்டாட்டத்தில் கோவை!


புதிய வருடம் தொடங்குகிறது என்பதை தாண்டி, புதிதாக பூமியில் பிறந்து விட்டது போன்ற உணர்வை மக்கள் மனதில் ஏற்படுத்திவருகிறது புத்தாண்டு. புதிய ஆடைகள், விடுமுறை, நண்பர்களுடன் கொண்டாட்டம், தொலைகாட்சியில் புதிய படம் என்று ஆண்டுதோறும் புதிய வருடப்பிறப்பை திருவிழாவைப் போல கொண்டாடி வருகிறோம்.

கலாச்சாரம்

மேற்கத்தைய கலாச்சாரம், நமது பண்பாடு இதுவல்ல என்று சமூக வலைதங்களில் நெட்டிசங்கள் சக்கைப்போடு போட்டாலும், இறுதியில் அவர்களே ‘அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என்று பதிவிடும் நிலைக்கு வந்துவிடுகிறார்கள். அந்த அளவுக்கு மக்கள் கொண்டாடத்திற்கு இன்றியமையாத ஒரு பண்டிகையாகிவிட்டது புத்தாண்டு. இத்தினத்தை கொண்டாடுவது என்பது நமது கலாச்சாரமாகவே நினைக்கத் தொடங்கி விட்டனர் இன்றைய இளைய தலைமுறையினர். சக மனிதரிடம் மன்னிப்பு கேட்பது தொடங்கி, அன்பை பரிமாறிக்கொள்ள பூங்கொத்து கொடுப்பது, பைக் ரைடு, பார்டி என நீண்டு கொண்டே செல்கிறது கொண்டாட்டங்களின் பட்டியல்.

பூங்கொத்து

பைக்-ரைடு, பார்டி என இளசுகள் சுற்றித்திரியும் இதே நேரத்தில் தான் குடும்பத்தினர் மற்றும் காதலர்கள் தங்களது அன்பையும், காதலையும் பரிமாறிக்கொள்ள பூங்கொத்தை தங்களுக்கு பிடித்தமானவர்களிடம் கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர். பூங்கித்து கொடுக்கும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை தயாரிக்கும் பணியும் கோவையில் சூடுபிடித்துள்ளது. 
உள்நாடு மற்றும் வெளிநாட்டு மலர்களையும் சேர்த்து கண்கவர் வண்ணங்களில் பூங்கொத்துக்களை தயாரிக்கின்றனர். பூங்கொத்தில் இடம்பெறும் முக்கிய மலராக ரோஜா உள்ளது. அதனோடு டேலியா உட்பட பல பூக்களும் சில செயற்கை பூக்களும் வைத்து அழகான பூங்கித்து தயாரிக்கபடுகிறது.

அவினாசி சாலை

ஆரம்பத்தில் தலைநகரங்களில் மட்டும் புத்தாண்டு விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வந்தது. இளைஞர் பட்டாளம் தங்களது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மொத்த நகரை சுற்றிலும் பவனிசெல்வர்.  முந்த நாள் இரவு தொடங்கி புத்தாண்டு தொடங்கிய சில மணி நேரங்களுக்கு நீடிக்கும் இந்த கொண்டாட்டம் சமீப காலமாக கோவையின் தோள்களையும் பற்றிக்கொண்டது.
கோவை மாநகரில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் முக்கிய சாலையாக அவினாசி சாலை உள்ளது. இங்கு தான் அதிக அளவில் வாகன நெரிசல் ஏற்படும். படு வேகமாக தங்களது வாகனகளை இயக்க நேர்த்தியான சாலையாக அவினாசி சாலை இருப்பதால் பல இளைஞர்கள் தங்களது பைக் ரைடு-க்கு இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். 

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

குடிபோதையில் சிலர் வாகனங்களை தாறுமாறாக ஓட்டிச் செல்கின்றனர். இதனால் புத்தாண்டு தினத்தில் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்ற. இதை தடுக்க கோவை மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக 22-க்கும்  மேற்பட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு மையங்களை அமைத்து கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். மேலும், குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அந்தந்த இடங்களிலேயே அமரவைத்து, மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர்.
நம்மை சுற்றிலும் பலத்த பாதுகாப்புகள் இருந்தாலும், ஆபத்துக்களும் அதே அளவில் உள்ளன. அதனால், மிகுந்த கவனத்துடன் இந்த புத்தாண்டை கொண்டாடலாம். இன்னும் பார்க்க வேண்டிய புத்தாண்டுகள் நிறையவே உள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...