கோவை மாநகர காவல் துறை சார்பில் ஆதரவற்ற மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்


கோவையின் பல்வேறு இடங்களிலுள்ள ஆதரவற்றோர் காப்பகங்களில் தங்கி ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் தொடக்கப்பள்ளி தொடங்கி கல்லூரி படிப்பு வரையில் படிக்கின்றனர். 

இந்த மாணவ மாணவிகளுக்கென பிரத்யேகமாக விளையாட்டுப் போட்டிகளை கோவை மாநகர காவல் துறையினர் நடத்தி வருகின்றனர். அதன்படி, வரும் 8-ம் தேதி நடைபெற உள்ள இந்த விளையாட்டு போட்டியை கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் தொடங்கி வைக்கிறார். 

இது குறித்து அவர் 'சிம்ப்ளி சிட்டி'க்கு அளித்த  பேட்டியில்  கூறியதாவது :- 

கோவையில் உள்ள ஆதரவற்ற மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தொடர்ந்து 5-வது ஆண்டாக வரும் 8-ம் தேதி கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கோவையிலுள்ள 17 காப்பகங்களில் தங்கியிருக்கும் 700க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்க உள்ளனர். 

நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் என 20 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுவோர்க்கு பரிசுகளும் மற்றவர்களுக்கு ஆறுதல் பரிகளும் காவல்துறை சார்பில் வழங்கப்பட உள்ளது. அன்று மாலை நடைபெற இருக்கும் பரிசளிப்பு விழாவில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் மற்றும் துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) லட்சுமி ஆகியோர் பங்கேற்கின்றனர். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...