ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள்


ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழர்கள் உணர்வை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை என்றால் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என கோசங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.



தமிழகர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாசலில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, உடனடியாக ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். இல்லையென்றால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம். அப்போது, காவிரி பிரச்சனையில் அமைதியாக இருந்தது போல் மத்திய அரசு மவுனம் காக்க வேண்டும் என தெரிவித்தனர். 

மேலும், சிங்கத்தை அடக்கக் கூறிய நீதிபதியை, வீடுகளில் சிங்கம் வளர்க்க அனுமதி கொடுத்தால் தாங்கள் சிங்கத்தை அடக்க தயார் எனவும், அனைத்து கிராமங்களிலும் சிங்கத்தை வளர்த்து அடக்கிக் கொள்கிறோம் எனவும் தெரிவித்த அவர்கள் தமிழகர்கள் உணர்வை புரிந்து கொள்ளாமல் பேசும் பேச்சை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் பேரூர் தாலுகாவில் தொடக்கம்

கோவை பேரூர் தாலுகா தென்கரை பஞ்சாயத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் 600க...

கோவை செம்மொழிப் பூங்காவில் மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல செம்மொழிப் பூங்காவில் மேயர் K. ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ரோஜாத் தோட்டம்,...

Driving Licences, RCs to Go Digital: Coimbatore Contract Workers Seek Alternative Jobs in Transport Dept

Following Tamil Nadu’s announcement that driving licences and vehicle Registration Certificates (RCs) will be issued dig...

மசக்காளிபாளையம் செங்குட்டையில் குப்பை அகற்றி மரக்கன்றுகள் நடவு

கோவை மாநகராட்சி மசக்காளிபாளையம், செங்குட்டை பகுதியில் குப்பை அகற்றி பத்துவகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை மாநகராட்...