ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் விழா- 2017 மேடை நாடகப் பயிலரங்கம்


ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் தமிழ் இலக்கியப் பேரவையின் சார்பாக முத்தமிழ் விழா- 2017 நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக புதனன்று (இன்று) மேடை நாடகப் பயிலரங்கம் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் முனைவர் கி.சித்ரா தலைமை வகித்தார். தமிழ்த்துறையின் தலைவர் முனைவர் கு.பாக்கியம் அனைவரையும் வரவேற்று பேசினார். பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் லி.ராம்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நடிப்புக்கலை என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

மேலும்  அவர் தனது உரையில் கூறுகையில், தமிழின் தொன்மையான கலை வடிவமான கூத்துக்கலையில் இருந்துதான் தற்காலத்திய நவீன நாடகங்கள் தோற்றம் பெற்றன என்றும், சங்ககால நாடக வகைகளில் பெண்கள் நடித்து வந்ததாகவும், ஆனால், இடைக்காலத்தில் ஆண்களே பெண் வேடம் அணிந்து நடித்ததாகவும், பிறகு 19ம் நூற்றாண்டிற்கு பின்தான் பாலாம்பாள், பாலாமணி போன்ற பெண் கலைஞர்கள் நடிக்கத் தொடங்கினர் என்று கூறினார்.

"நாடகச் சாலையொத்த நற்கலா சாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து" என்ற கவிமணியின் கூற்றிற்கேற்ப மக்களின் கண்ணையும், செவியையும், கருத்தையும் கவரும் வகையில் மேடைநாடகங்கள் அமைந்து மக்களின் வாழ்வைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.



பயிலரங்கத்தின் இறுதியில் மாணவ நாடகக் குழுவின் உறுப்பினர்களைக் கொண்டு, பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளும், இல்லத்தரசிகளின் துயரங்களையும் மையமாகக் கொண்ட தமிழச்சி தங்க பாண்டியனின் "கூந்தல் கனவுகள்" என்ற நாடகத்தினை அரங்கேற்றி மாணவியர்களுக்கு நேரடி செயல்முறை பயிற்சியும் அளித்தார்.



இதில், பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் க.அபிநயா, சந்திரமதி, சந்திரிகா, ஸ்ரீஜா பிரியதர்ஷினி, கிருத்திகா, ஹரிபிரசாத், அருந்ததி, கல்பனா, கிருபாசக்தி ஆகிய மாணவ, மாணவிகள் இணைந்து நடத்திய கலைக் கூத்து நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.



இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் மற்றும்  மாணவியர்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...