ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் விழா- 2017 மேடை நாடகப் பயிலரங்கம்


ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் தமிழ் இலக்கியப் பேரவையின் சார்பாக முத்தமிழ் விழா- 2017 நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக புதனன்று (இன்று) மேடை நாடகப் பயிலரங்கம் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் முனைவர் கி.சித்ரா தலைமை வகித்தார். தமிழ்த்துறையின் தலைவர் முனைவர் கு.பாக்கியம் அனைவரையும் வரவேற்று பேசினார். பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் லி.ராம்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நடிப்புக்கலை என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

மேலும்  அவர் தனது உரையில் கூறுகையில், தமிழின் தொன்மையான கலை வடிவமான கூத்துக்கலையில் இருந்துதான் தற்காலத்திய நவீன நாடகங்கள் தோற்றம் பெற்றன என்றும், சங்ககால நாடக வகைகளில் பெண்கள் நடித்து வந்ததாகவும், ஆனால், இடைக்காலத்தில் ஆண்களே பெண் வேடம் அணிந்து நடித்ததாகவும், பிறகு 19ம் நூற்றாண்டிற்கு பின்தான் பாலாம்பாள், பாலாமணி போன்ற பெண் கலைஞர்கள் நடிக்கத் தொடங்கினர் என்று கூறினார்.

"நாடகச் சாலையொத்த நற்கலா சாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து" என்ற கவிமணியின் கூற்றிற்கேற்ப மக்களின் கண்ணையும், செவியையும், கருத்தையும் கவரும் வகையில் மேடைநாடகங்கள் அமைந்து மக்களின் வாழ்வைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.



பயிலரங்கத்தின் இறுதியில் மாணவ நாடகக் குழுவின் உறுப்பினர்களைக் கொண்டு, பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளும், இல்லத்தரசிகளின் துயரங்களையும் மையமாகக் கொண்ட தமிழச்சி தங்க பாண்டியனின் "கூந்தல் கனவுகள்" என்ற நாடகத்தினை அரங்கேற்றி மாணவியர்களுக்கு நேரடி செயல்முறை பயிற்சியும் அளித்தார்.



இதில், பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் க.அபிநயா, சந்திரமதி, சந்திரிகா, ஸ்ரீஜா பிரியதர்ஷினி, கிருத்திகா, ஹரிபிரசாத், அருந்ததி, கல்பனா, கிருபாசக்தி ஆகிய மாணவ, மாணவிகள் இணைந்து நடத்திய கலைக் கூத்து நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.



இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் மற்றும்  மாணவியர்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...