10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்யக்கோரி த.பெ.தி.க-வினர் ஆட்சியரிடம் மனு


தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்யக்கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சிறை கதவுகளுக்கு பின்னர் கைவிலங்கு அணிந்து இருப்பது போல நூதன முறையில் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு அவ்வமைப்பினர் சிறைவாசிகளின் நிலையை சித்தரிக்கும் வகையில் சிறை கதவுகளுக்குள் இருப்பது போல சித்தரிக்கும் வகையில், சிறை கதவுகளுடன் கைவிலங்கு அணிந்தபடி வந்தனர். 

கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆயுள் தண்டனை கைதிகள் பத்து ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுவதாகவும், ஆனால் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கைதிகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடி வருவதாகவும் த.பெ.தி.க-வினர் குற்றம் சாட்டினர். 

கடந்த காலங்களில் தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டது போல, பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமெனவும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரரிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். 

சிறை கதவுடன் கைவிலங்கிட்டபடி மனு அளிக்க வந்தவர்களால் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...