பொங்கல் பண்டிகையை பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து நீக்கிய மத்திய அரசைக் கண்டித்து அரசு கலை கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்


பொங்கல் பண்டிகையை பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து நீக்கிய மத்திய அரசைக் கண்டித்தும், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கக் கோரியும் கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மத்திய அரசை கண்டித்து இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பியபடி, திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 

அப்போது, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்கக் கோரி இளைஞர்களும், மாணவர்களும் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்துவதை திசை திருப்புவதற்காகவே மத்திய அரசு பொது விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகையை நீக்கி இருப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். 

மேலும், மத்திய அரசு பொது விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகையினை உடனடியாக சேர்க்கவும், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் சமரசப்படுத்தியதை அடுத்து, மறியல் போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர்.

இதேபோல கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்ததை கண்டித்து இன்று நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதைத்தொடர்ந்து, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய கல்லூரி நிர்வாகம் பொங்கல் விழா கொண்டாட அனுமதி வழங்கியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...