மத்திய அரசு அனுமதி தராவிட்டால் தடையைமீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என ஒன்றிணைந்த கோவை வாழ் மக்கள்


தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி தென்தமிழகத்தின் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு எனப்படும் தமிழர்களின் வீரவிளையாட்டு நடத்தப்படுவது வழக்கம். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் தொன்மையான விளையாட்டுகளில் ஒன்றாகும். மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. இதைக் காண வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழகத்துக்கு வருகை தருவர்.



இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விலங்குகள் நல வாரியம் என்றழைக்கப்படும் பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது.



இதைத்தொடர்ந்து, இந்த தடையை நீக்கிவிட்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கூறி தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட லட்சக் கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடந்த இரண்டு வருடமாக நடத்தமுடியாமல் உள்ள தமிழர்களின் ஜல்லிக்கட்டை இவ்வருடன் நடத்தியே ஆக வேண்டும் என பலரும் முயற்சித்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, வரும் பொங்கல் தினங்களில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என ஆதரவு தெரிவித்து கோவை மாவட்டம், அவினாசி சாலையில் அமைந்துள்ள கொடிசியா வளாகத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட கோவை மக்கள் இன்று ஒன்றிணைந்துள்ளனர்.



மத்திய அரசு ஜல்லிக்கட்டை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தடையை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்துவோம், பீட்டாவும், மத்திய அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கடைபிடித்து வரும் பிடிவாதத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாரும், முழக்கங்களை எழுப்பியவாரும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...