கோவையை புரட்டி எடுத்த இளைஞர்களின் புரட்சி போராட்டம்!


கோவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டம் வ.உ.சி மைதானத்தில் மாபெரும் எழுச்சி பெற்றுள்ளது. நேற்று தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஒருபகுதியாக கோவையில் ஜல்லிக்கட்டிற்காக பல்வேறு தரப்பின் ஆதரவு அளித்தும் கோவையில் முழுக்கடையடைப்பு நடைபெற்றது. இதன் மையமாக நேற்றிரவு வ.உ.சி மைதானத்தில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.



நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மாணவர்கள் எழுச்சி கூட்டதிற்கு பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளையும் போராட்டத்திற்கு அழைத்து வருகின்றனர். பணிக்கு செல்பவர்களும் தங்களின் ஆதரவினை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். மேலும், இளைஞர்கள் மோடி போன்ற உருவம் சித்தரித்து அதனை போராட்டகளத்தில் கொண்டு வந்தும் தங்களின் எதிர்ப்பினை தெரிவித்தும், பறை இசைகளிலும், சிறுவர் சிறுமியர் கம்பு சுத்தியும், சிறுவர்கள் ஒலிபெருக்கியின் மூலமாகவும் ஜல்லிகட்டிற்கு ஆதரவாகவும் பேசியும் பொதுமக்கள் அனைவரையும் கவர்ந்தனர். மேலும் ஆங்காங்கே இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கோஷங்கள் எழுப்பியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



ஐந்தாவது நாளாக தொடரும் இந்த எழுச்சி போராட்டத்தில் மாணவர்கள் சாலைகளின் அமர்ந்தும் போராடி வருகின்றனர். மேலும் பெண்கள் சிலர் போராட்டத்தின் போது மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கான முதலுதவிகளும் மைதானத்தின் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவசரகட்டத்தில் மருத்துவமனைக்கு செல்வதற்கும் ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...