ஹீரோ ரோ ஐ -லீக் கால்பந்து : சென்னை எஃப்.சி.- சர்ச்சில் பிரதர்ஸ் ஆட்டம் டிரா

கோவை : ஹீரோ ரோ ஐ-லீக் கால்பந்து போட்டியில் சென்னை எஃப்.சி. - சர்ச்சில் பிரதர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.


கோவை : à®¹à¯€à®°à¯‹ ரோ ஐ-லீக் கால்பந்து போட்டியில் சென்னை எஃப்.சி. - சர்ச்சில் பிரதர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. 

கோவை வ.உ.சி., மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணியின் வீரர் சரிபலத்துடன் மோதினர். ஆட்டத்தின் முதல் பாதியிலேயே சென்னை அணியினருக்கு கோல் அடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதனால், சென்னை அணியின் கோர்டிலோ முதல் கோலை அடித்து, ஆட்டத்தின் முதல் பாதியில் முன்னிலைப் பெற்று தந்தார். 



இதைத் தொடர்ந்து, நடந்த 2-வது பாதி ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சர்ச்சில் பிரதர்ஸ் அணியின் நோவாகோவிச் ஒரு கோலை அடித்து சமநிலைப் பெற்று தந்தார். இதைத் தொடர்ந்து, அடுத்த 6 நிமிடங்களில் சக வீரர் இஸ்ரேயில் மேலும் ஒரு கோலை அடித்து அந்த அணிக்கு 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுத்தந்தார். இதனால், உள்ளூர் ரசிகர்கள் இருக்கையின் நுணிக்கே அமர்ந்து ஆட்டத்தை பரபரப்புடன் பார்த்துக் கொண்டனர். 



அப்போது, 62-வது நிமிடத்தில் சென்னை அணியின் சேன்ட்ரோ ரோட்ரிகுயிஷ் ஒரு கோலை அடித்தார். இதனால், ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். பின்னர், இரு அணி வீரர்களும் மேற்கொண்ட எந்தவித கோல்களையும் அடிக்காததால் போட்டி சமனில் முடிந்தது. இந்த ஆட்டத்தின் சிறந்த வீரராக நோவாகோவிச் தேர்வு செய்யப்பட்டார்.



வரும் 24-ம் தேதி சென்னை எஃப்.சி அணி டெல்லி ஜவஹர்லால் மைதானத்தில் நடக்கும் தனது அடுத்த போட்டியில் நெரோகா எஃப்.சி.யை எதிர்கொள்கிறது. 



Newsletter