பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி : சச்சிதானந்த ஜோதி நிகேதன் இன்டர்நேசனல் பள்ளி எளிதில் வெற்றி

கோவை : 14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், சச்சிதானந்த ஜோதி நிகேதன் இன்டர்நேசனல் பள்ளி எளிதில் வெற்றி பெற்றது.


கோவை : 14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், சச்சிதானந்த ஜோதி நிகேதன் இன்டர்நேசனல் பள்ளி எளிதில் வெற்றி பெற்றது. 

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான 'கோவை ரோட்டரி கிளப்பின் மெட்ரோபொலிஷ் கோப்பை' கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் இன்டர்நேசனல் பள்ளியும், மணி உயர்நிலைப் பள்ளி அணியும் பலப்பரிட்சை நடத்தின. இதில், முதலில் பேட் செய்த சச்சிதானந்த பள்ளி அணி 24.4 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து பேட் செய்த மணி உயர்நிலைப்பள்ளி அணியின் வீரர்கள், எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுக்களை இழந்தனர். 



எஸ். ஸ்ரீநிதின் ஹாட்ரிக்குடன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் அந்த அணி 15.4 ஓவர்களில் 50 ரன்களுக்கு சுருண்டது. 

இதேபோல, ஏ. ஜோன்ஸின் (5/6) அபார பந்து வீச்சால் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேட்ரிக் உயர்நிலைப் பள்ளி (207 ரன்கள்), டி.கே.எஸ். மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியை (வெறும் 22 ரன்கள்) எளிதில் தோற்கடித்தது. 

Newsletter