28-வது டி.ஆர். சுகுமாறன் நினைவு கூடைப்பந்து போட்டியில் மல்லையன், அல்வேனியா பள்ளி அணிகள் வெற்றி

கோவை : கோயம்புத்தூர் ரவுன்ட் டேபில் எண் 9 மற்றும் டெக்ஸ்சிட்டி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 28-வது டி.ஆர். சுகுமாறன் நினைவு கூடைப்பந்துப் போட்டி கோவை வஉசி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.


கோவை : கோயம்புத்தூர் ரவுன்ட் டேபில் எண் 9 மற்றும் டெக்ஸ்சிட்டி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 28-வது டி.ஆர். சுகுமாறன் நினைவு கூடைப்பந்துப் போட்டி கோவை வஉசி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

டி.ஆர்.சுகுராமன் நினைவாக நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டியில் மல்லையன் பள்ளி, பி.எஸ்.ஜி சர்வஜனா பள்ளி, சபர்பன் ஆண்கள் பள்ளி மூன்றும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் விளையாட்டில் ஈடுபட்ட போதும் மல்லையன் பள்ளி அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் கோப்பையைத் தட்டிச் சென்றது.



பெண்கள் பிரிவில், அல்வேனியா பள்ளி அணி, சி.சி.எம்.ஏ மகளிர் மேல்நிலைபள்ளி அணியை 54-28 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி கோப்பையை வென்றது.



சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஏரியா 7 ரவுன்ட் டேபில் துணைத் தலைவர் எம்எல்எஃப் டி.எஸ்.அஸ்வின் குமார் ஆண்கள் பிரிவில் வென்ற அணிக்குப் பரிசு வழங்கினார். வெற்றி பெற்ற பெண்கள் அணிக்கு ரவுன்ட் டேபில் லேடிஸ் சர்க்கில் தலைவர் பூங்குழலி பரிசுக் கோப்பையை வழங்கினார். 

மேலும், பெண்கள் அணி 6 உள்ளிட்ட 17 பள்ளி அணிகள் கலந்துகொண்ட இந்தப் போட்டிகள் நவம்பர் 23-ம் தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

Newsletter